நான் நடக்கும்போது
தரையில் இரைகொத்தும் பறவை
தத்திப் பறப்பதில்லை
எதிரே வரும் பெண்
துப்பட்டாவைச் சரிசெய்வதில்லை
அயர்ந்துறங்கும் தெருநாய்
காதுவிடைத்துக் கண்விழிப்பதில்லை
ஆனால் வளர்ப்புநாய்கள் மட்டும்
வள்ளென்று விழுகின்றன
சங்கிலி மட்டும் இல்லாவிட்டால்
பிறாண்டியே விடுவதுபோல்
இரும்புக்கதவிடுக்கில் பாய்கின்றன