நகுலனையோ பிறரையோ
போலிசெய்யாதே என்றான் விமர்சகன்
திமிராகக் கேட்டேன்
‘எந்த நகுலன்?’ என்றல்ல
‘யார் நகுலன்?’ என்று
(இதற்கிடையே
பக்கத்து வீட்டுச் சிறுவனை
‘டே, நகுல்!’ என்று விளித்தபோது
திரும்பவும் திருத்தினான்
‘ஜி இல்லை அங்கிள், கே!
ந(க்)குல்’)
செருக்குற மொழிவேன்:
நான் எழுதியது நான் எழுதியதுதான்
நான் எழுதியது எழுதியதுதான்
18/05/14