“கருமேகத்திட்டு ஒன்று கதிர்மறைத்த கணநேர நிழல் அது. வீடு வரை வெயில் இப்படித்தான் உறைக்கும். தலையே தாங்கிக்கொள்”
“சேர்ந்து நடப்பவர் காண். எடுத்த அடிவைப்பிலும் இடக்கை வீச்சிலும் வலக்கை அசைவிலும் என்னவொரு இசைவு. முகம் பார்க்காமலேயே விரைகையிலும் இவ்வுதடு முடிக்க அவ்வுதடு தொடங்கும் பேச்சிசை. சேர்ந்தும் நடைபயில்”
“எட்டு மணிக்குள் சேர என்னதான் ஓடினாலும் சொல்லிவைத்து ஒரே வண்ணச் சேலை. கூந்தலில் ஆளுக்கொரு வகை பூச்சரம். அழகுணர்ச்சி அவரிடம் பயில்”
“மழையும் வேண்டும். மாநகர வாழ்வும் வேண்டுமா? தேங்குநீரில் கசிவிறக்கும் புதைமின்வடமும், நீர்சுழித்திறங்கும் திறந்த ஆட்குழியும், புழுதிக்குழம்பைச் சிதற்றும் வாகனமும் பார்த்து நட.”