இப்போதெல்லாம்

நான் நடக்கும்போது

தரையில் இரைகொத்தும் பறவை

தத்திப் பறப்பதில்லை

எதிரே வரும் பெண்

துப்பட்டாவைச் சரிசெய்வதில்லை

அயர்ந்துறங்கும் தெருநாய்

காதுவிடைத்துக் கண்விழிப்பதில்லை

ஆனால் வளர்ப்புநாய்கள் மட்டும்

வள்ளென்று விழுகின்றன

சங்கிலி மட்டும் இல்லாவிட்டால்

பிறாண்டியே விடுவதுபோல்

இரும்புக்கதவிடுக்கில் பாய்கின்றன

இப்போதெல்லாம்

2 thoughts on “இப்போதெல்லாம்

ஏதாவது சொல்லவேண்டுமா? (...வாய்ல வருது..ஆ?)

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s