ஏரண கரணியத் (logical reasoning) தேர்வு
கூற்று 1: தற்போதுள்ள சூழ்நிலையில் அரசாங்கத்தின் ஆதரவு இல்லாமல் எந்தவொரு முழுஅடைப்பு போராட்டமும் வெற்றிபெற இயலாது.
கூற்று 2: ஒரு முழுஅடைப்புப் போராட்டம் வெற்றிபெறவில்லை என்றால் எதை முன்வைத்து அப்போராட்டம் நடைபெற்றதோ அக்கோரிக்கைக்கு மக்கள் ஆதரவு இல்லை என்று பொருள்கொள்ளப்படும்.
மேற்கண்ட கூற்றுகளிலிருந்து பின்வருவனற்றுள் எந்த/எந்தெந்த துணிபுகளை அடையலாம்?
(அ) அரசாங்கத்தின் ஆதரவு இருந்தாலே எந்த ஒரு முழுஅடைப்புப் போராட்டமும் வெற்றிபெற்றுவிடும்
(ஆ) கோரிக்கைக்கு உண்மையான மக்கள் ஆதரவு இருந்தால் அரசாங்கத்தின் ஆதரவின்றியே முழு அடைப்பு வெற்றிபெறும்
(இ) அரசாங்கத்தின் ஆதரவு இல்லாத நிலையில் முழு அடைப்பு போராட்டத்தை நடத்துவது அக்கோரிக்கையை வலுவிழக்கச் செய்வதாகும்
(ஈ) மேற்கண்ட எல்லாம் சரி
(உ) மேற்கண்ட எதுவுமே சரியில்லை
உளஅளவியல் (psychometric) தேர்வு
ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கிற மக்கள் தலைவர் ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்று பதவியிழக்கிறார். இந்தச் சூழ்நிலையில் பின்வருவனற்றுள் எது சரி என்று உங்களுக்குப்படுகிறது?
(அ) மாநிலத்தின் நலன்களைப் பேணுகிற வலுவான பிற தலைவர்கள் இல்லாத நிலையில் அவரை ஆதரிப்பதே மாநில நலன் கருதி நியாயமான செயல்
(ஆ) ஊழல் செய்த மற்றவர்கள் அத்தகைய தண்டனைகளுக்கு ஆளாகாதபோது இவரை மட்டும் தண்டிப்பது அநியாயம்
(இ) வேறொரு மாநிலத்தில் வழக்கு நடைபெற்றுள்ள நிலையில் இத்தகைய தண்டனைக்கு உள்நோக்கம் கற்பிக்க போதுமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றின் அடிப்படையில் சந்தேகத்தின் பலனை அவருக்கு அளித்து அவர் பின்நிற்பதே நியாயம்
(ஈ) ஊழல் என்பது மனித உரிமை மீறல். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவதே நியாயம்
(உ) தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் முதல்வருக்கு எதிரான சதி நடந்திருப்பதற்கு அரசியல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் முகாந்திரங்கள் இருப்பதாகப்படுவதால் அவரை ஆதரிப்பதே நியாயம்